என் நினைவுகளில் இருந்து நீங்கவில்லை நீ

என் வானத்தில்,
காரிருள் மேகங்கள் உன் கண்களே;
மழையும், காதல் மழையும்
பொழிந்தது, என் மனதினிலே...

"பூ"வின் இதழ்கள் மலர்வதோர் அழகு;
உன் உதடுகளோ வாடாத-
ரோஜாவின் இதழ்கள்,
அஃது மலர்ந்து-
புன்னகிப்பதோர் அழகு;
முன்னம் சொன்னது அழகு;
பின்னம் சொன்னது பேரழகு...

நான் ரசிக்க ஏதுவாய்;
பின்னாத கூந்தலை கோதுவாய்;
அச்செயலில் தோன்றும் உன்-
ஆப்பிள் போன்ற கன்னங்கள்;
உதடுகள் பதிக்கும் சின்னங்கள்;
சின்னத்துக்கு வாக்காளர் நான்;
வாழ்நாள் முழுதும் ஓட்டுக்களை-
பதிப்பேன் நான்!!!

மின்னல் ஒளிகூட-
என் கண்பார்வையை-
பறிக்கவில்லை;
உன் முகத்தின் அழகு ஒளி-
என்னை குருடனாக்கியது;
என்னை சுற்றி இருள் இல்லை,
உன் முகமே...

கொள்ளையழகு கொண்டவளே;
கொய்யாமல் கொய்தாய்;
கொடுத்திடலாம் கொய்ததையல்ல;
கொள்ளையடிக்கும் இதயத்தை;

பேரழகு கொண்டவளே;
உன்னழகின் உரிமை
யாருக்கு சொந்தம்?
உன்னை படைத்த பிரம்மனுக்கு??
இல்லை, உன்மீது படையெடுத்து-
வருமிந்த குமாரனுக்கா???

நமது காதல் தேசத்திலிருந்து-
நம்மை பிரித்திருக்கலாம்-காலம்;
நம் நினைவுகளை பிரிக்கமுடியுமா-
ஓர்காலம்!?....
உன்னை மணமுடிக்க
படையெடுப்பேன்,
எதிர் வருவோனை தகர்ப்பேன்..

எழுதியவர் : வசந்தகுமாரன் (27-Jul-16, 7:07 pm)
பார்வை : 692

மேலே