தென்றல் அவள்•••

மின்னுகிற மின்னலே உன்
வெளிச்சத்தை பெரிதாக்கி உற்றுக்கொஞ்சம் பாரெனை
நான்தான் உன்னைய
காதலிச்ச பழய காதலன்
ஞாபகம் இருக்கின்றதா !

இடிக்கின்ற வானமே இதற்குத்தான் இதயத்தில் இடித்தாயா வலிக்கிறதே
ஆற்றிவிட சொல்வாயா
எதையும் நினைக்காமல்
இதமாய் உரங்கிடவே !

பொழிகின்ற மழையே
நீ வந்து பொழிவதனால்
காயங்கள் ஆறிவிடுமா
உம்மையா அனுப்பினாள்
என் ஞாபகம் இல்லாமலா
சிந்தித்துப் பார் கொஞ்சம் !

காயங்கள் குளிர்கின்றதே
எங்கேயும் போகவில்லை
என்னைவிட்டு தென்றல்
இங்கேதான் எங்கேயோ
என்னருகில் இருக்கிறாள்
எனக்கது தெறியவில்லை !

ஏதேதோ பேசி கோபித்தேன்
என்னை மன்னித்து விடு
கெட்டால் தான் புத்திவரும்
என்றார்கள் சான்றோர்கள்
வருந்துகிறேன் வா அருகில்
வந்து என்னை சேர்ந்திரு !

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (28-Jul-16, 8:10 am)
பார்வை : 218

மேலே