நெஞ்சமெல்லாம் வலிக்குது

அன்பே என்
அன்பே.....தீராத
வலியை
என்னுள் திணித்து
தெரியாத
தேசத்தில்
எங்கே நீ......
மறைந்தாய்.....??

பல நாளாய்
நெஞ்சுக்குள்
சொல்லமுடியாத
வலி.....
இப்படியும்
சாகடிக்குமா
என்னவள்
பிரிவு..... என்று
இன்னுமின்னும்
உணர்ந்துகொண்டேன்.....

நேரம்
நிமிஷம்
மறந்தே
போச்சு.....நாளும்
கிழமையும்
மறந்தே
ஆச்சு.....எல்லாமே
உன்னால்தான்
இப்டியாச்சு.....

உன்னோடு
சேராமல்
மண்ணோடு....
போனாலும்.....அந்த
மண்ணும்
என்னை
வெறுக்குமே......
காலம்தான்
பதில்
சொல்லும்......
காலமெல்லாம்
என்னைக்
காதல்
கொல்லும்......!!

யாரோடும்
பேசாத
நிகழ்கால
மௌனம்.....நிச்சயம்
என்
மார்படைத்து
முற்றுப்
பெறும்......!!!

எழுதியவர் : thampu (29-Jul-16, 12:38 am)
பார்வை : 286

மேலே