கவிதை 106 தன்னை உணர வைத்தனவே

உள்ளத்தில் உதித்த எண்ணங்கள்
உதட்டினில் தவழ மறுத்தனவே
கலங்கித் தவித்திடும் விழிகளை
இமைகள் மறைக்கத் தவறியதே

கன்னத்தில் வழிந்திடும் சிற்றோடையை
கைகள் அணையாய் தடுத்தனவே
தளர்ந்து நடுங்கிடும் பாதங்களை
நிலமகள் தாங்கி நிறுத்தினளே

அறிந்து செய்த பாவங்களும்
அறியாது செய்த புண்ணியங்களும்
தொடர்ந்து வரும் துயரங்களெல்லாம்
தன்னை உணர வைத்தனவே

மூடிக் கிடந்த மனக்கதவும்
ஆடித் தளர்ந்த உள்ளமும்
தன்னுள்ளே இறைவனை உணர்ந்ததால்
புவிஉலகம் பூவுலகமாய் மலர்ந்ததுவே

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (31-Jul-16, 8:43 pm)
பார்வை : 97

மேலே