பன்முகத் தேடலிலே

பன்முகத் தேடலிலே
கழிக்கும் காலங்களிலே
தோன்றும் சூழ்நிலைகளோ

பலவாறு மனத்தை
உற்சாகப்படுத்தவும்'
ஒரு நிலைப் படுத்துவதிலும்

அலக்கழிப்பதிலும்
கூட்டணி அமைக்க
பட்டும் படாமல்

நல்லதை எடுத்து
தீயதை விடுத்து
கைக்கொள்வதிலும்

கையாள்வதிலும்
திறமை காட்டுவதே
நலம் பயக்கும்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (1-Aug-16, 10:46 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 557

மேலே