வானவில்லாய் நீ

உன்னை கண்ட நொடிதனில்
பூவுக்குள் ஏனோ ஒரு பூகம்பம்...
என் மனதுக்குள் கண்டேன்
ஓர் பிரளயம்...!

மழையற்ற நாளின்
வானவில்லாய்....
என் மனதோடு வந்தாய்
வண்ணங்களாய்...!

எங்கேயோ ...
தொலைத்த என்னை
தேடிப்பார்க்கிறேன்....
உன் விழி வழியே...!

என் கவிதையில் சொல்லா
காதலை...
உன் கண்களால்
சொல்லி சென்றாயடா...!

வன்முறை ஏனடா புரிகிறாய்...?
உன் வார்த்தைகளற்ற மௌனங்களால்...!

தனிமையும் என்னை வெறுத்ததே ...
உன் நினைவுகள்
என்னோடு த(தே)ங்கியதால்...!

மரணம் கடந்திட வேண்டுமடா...
மனதோடு நீயும் வாழ்வதனால்...!

- கீதா பரமன்

எழுதியவர் : Geetha paraman (2-Aug-16, 6:11 pm)
Tanglish : vaanavillaai nee
பார்வை : 327

மேலே