kadhal kaluvathaiya

''இங்கேயே வெயிட் பண்ணு. இதோ பத்து நிமிசத்துல வந்துறேன்'' என்று தன் நகைகளை வாங்கிக்கொண்டு, விற்று பணமாக மாற்றி வருவதாக சொல்லி சென்ற பிரகாஷை இன்னும் காணோமே என்று தவித்துக்கொண்டு இருந்தாள் கீதா .
இருவரும் சேர்த்து அன்று ரயிலில் ஓடி போவதாக திட்டம் . அவர்கள் செல்ல வேண்டிய ரயில் கிளம்புவதற்கான ஆயத்தங்கள் தெரிந்தன . பதார்த்ததுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள் கீதா . காதலனை தேடிய அவளது விழிகள் யதேச்சையாக அருகில் இருந்த அறிவிப்பு பலகையை பார்க்க, அதில் 'கை கழுவும் இடம்' என்று எழுதப்பட்டு இருந்தது.

எழுதியவர் : DIVIYAH (3-Aug-16, 7:08 pm)
பார்வை : 159

மேலே