தகப்பன் சுவாமி

சிவனுக்கு உபதேசம் செய்ததாலே
முருகனவன் தகப்பன் சுவாமி என்றோர் பெயர் பெற்றான்.
கல் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த,
தமிழ் மொழிக்கு இலக்கணம் தந்ததாலே
தரணிக்கே அவன் தகப்பனன்றோ!

மூவாத மொழிக்கு முந்தியிருந்து
முக்காலமும் தந்தவன்
காயத கானகத்தே கவி வள்ளியின்
கை பிடித்து காதல் புரிந்தவன்.
ஓயாத வாழ்வதனில் முக்திக்கு
ஓம்கார நாதமென பிரணவத்தின்
பொருள் தந்தவன்.

மன்றாடும் மனத்தினிலே
வந்தாடும் கஷ்டங்கள்
கடுகெனவே மாற்றிடும்
நின்றாடும் முருகனவன்.

எழுதியவர் : arsm1952 (5-Aug-16, 11:36 am)
பார்வை : 157

மேலே