அழகிய தமிழ் மகள்
ஆணிப்பொன் நிலவே
ஆரா என்னமுதே...
தேயும் பிறையொளியின்
மங்கா மாச்சுடரே...
மயிலும் மதியிழக்கும்
துயிலும் விழி மறக்கும்
மானே நீ கடந்தால்
மஞ்சம் சிறகடிக்கும்
புரவியும் திசை மறக்கும்...!
நௌவி நின் வடிவில்
மௌவலும் விழையும்
இந்த யௌவனம் பொருள்கொள்ளும்...!
-அருண்வேந்தன்