என் விழிகளில் வழியும் கண்ணீர்த்துளி 555
என்னவளே...
என் இதயம் முழுவதும்
நிறைந்திருப்பது...
உன் நினைவுகள் மட்டுமே
எண்ணில் மிச்சமடி...
நாம் சேர்ந்திருந்த அந்த
அழகான நாட்கள்...
இன்று நீ வேறு திசையில்
நான் வேறு திசையில்...
தேடுகிறேன் உன்னையும்
உன் வார்த்தைகளையும்...
என் விழிகளில் பெருக்கெடுத்த
கண்ணீர் கன்னங்களில் ஓடினாலும்...
நாம் சேர்ந்திருந்த நாட்களை
மறக்கவும் இல்லை...
மறக்கவும் முடிவதில்லை
என்னால்...
உன்னால் எப்படி
எளிதாக முடிந்தது.....