கிறுக்கல்கள்

உள்ளப் புயலுக்கு இடையேயும் புன்னகைக்கும் உதடுகள்
தெரிந்தே தொலைத்ததை தேடும் விழிகள்
கனமான ஏக்கப் பெருமூச்சு
தவிக்கவைக்கும் எண்ணக் குவியல்கள்
செய்வதறியாமல் திகைக்கும் வயது
அனைத்தினதும் பிரதிபலிப்பாய்
இமை மூட மறுக்கும் நிலையில் கிறுக்கல்களாய் என் தினப்பதிவேட்டிடம் ஒரு ரகசிய சம்பாஷணை
நிரந்தர அமாவாசையில் சிக்கிய நிலவாய்
கருமைக்குள் மறைந்திட்ட ஓவியமாய்
இங்கு நான் நிறம் தொலைத்து காணாமல் போனேன் ................

எழுதியவர் : Laa (6-Aug-16, 11:39 pm)
சேர்த்தது : கவியாழினி (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : kirukkalkal
பார்வை : 102

மேலே