கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்



கடவுளைத் தேடித் தேடி
தேய்ந்து போனது
கால்கள்!

காண முடியாமல்
காய்ந்து போயின
கண்கள்!

இறுதியில்
இமைகளை
மூடிக் கொண்டு
தேடினேன்!

ஞானம் பிறந்தது...
பத்து மாதங்களாய்
கருவறையில் காத்து
பெற்று வளர்த்த
தாயே கடவுள்..!

எழுதியவர் : தி.தனலட்சுமி (15-Jul-10, 11:13 am)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 552

மேலே