இரவு தேவதையின் சீமந்த புத்திரர்கள்
இவை
இரவு தேவதையின்
சீமந்த புத்திரர்கள்
பகல் என்ற ஆசிரியரை
கண்டு விட்டால்
பதுங்கி விடும் மாணவர்கள்
இந்த பளிச்சென்று
உடையணிந்த அண்ணன் தம்பிகள்
கோடான கோடிக்களுக்கு மேல்
இவர்கள் அழகான பெண்களைப் போல..
தூரத்திலிருந்து பார்த்திருக்கும் போது
இனிமையாய் சிரித்திருப்பர்
அருகே போய்விட்டால்
அனலாக மாறி விடுவர்
கண்களை கணலாக மாற்றி விடுவர்.
இந்த அழகிய
கண்கள் மைதீட்டிக் கொண்டதினால்
தான் இனிய இரவு உருவாகியிருக்கிறது
இந்த எழில் மிகு பெண்கள் சூரிய ராஜனைக்
கண்டு நாணமுறுவதால் தான்
பகலில் வெளிவராமலிருக்கிறார்கள்.