அவள் இல்லாமல்



போன வழியும் தெரியல
வந்த வழியும் புரியல;

கண் மூடி திறக்கும் முன்
எல்லாமே நடந்துருச்சு;

அவ கிட்ட கூட சொல்லல,

கை பிடிச்ச நாளாய்
என் நிழலாய், என் தோழியாய், என் உயிராய்
என் கூடவே தான் அவ இருப்பா;

பாவி அவ தனியா என்னத்த செய்வாளோ
புரியலையே!

நான் சிரிச்சா அவ சிரிப்பா,
நான் அழுதா அவ தொடப்பா,
இன்பமோ துன்பமோ ஒன்னாதான் இருந்துருகோம்

சோறு தண்ணி கூட இறங்காது அவளுக்கு
நான் சாப்புடாம;

வெளிய நான் போனாலும் மனசெல்லாம்
வழியில வெச்சு காத்து கெடப்பா;

நித்தம் ஒரு சண்டையின்னு போட்டு கிட்டா கூட
ஒருத்தருகொருத்தர் பேசாம இருந்தது இல்ல;

பிள்ளைங்க ரெண்டு பொறந்தும் கூட
எங்க காதல் கொறையவே இல்ல;

மருமகளுங்க வந்தும் கூட
அவ கையாள சாப்டா தான் வயிறு நிறையும்

கெழவி ஆகியும் கூட அவ இன்னும்
எத்தனை அழகாதான் இருக்குறா;

என்ன உசுரா நேசிச்ச அந்த சிருக்கிய
விட்டுட்டு வந்துட்டேனே;

அவ இல்லாம இந்த சொர்க்கமும்
எனக்கு நரகம் தான்!

எழுதியவர் : அஜ்மத் பானு (15-Jul-10, 11:14 am)
சேர்த்தது : கீத்ஸ்
Tanglish : aval illamal
பார்வை : 482

மேலே