அநாதை
அநாதை
இரு உயிர்கள் செய்த தவறிலே
ஒரு உயிரும் வந்துதித்ததே
கடவுள் தந்த வரமதுவும்
தெருவில் தவழ்ந்து திரியுதே....
தாய்மடி தேடி அழுதிடும் போது
தாலாட்டு பாடிடவும் அன்னையில்லை
எட்டு வைத்து நடந்திடும் போது
எட்டி பிடித்திடவும் தந்தையில்லை.....
அழுதிடும் போது அரவணைத்திடவும்
மழலையின் சிரிப்பில் மயங்கிடவும்
மடியினில் இட்டு கதைகள் பல சொல்லிடவும்
உறவுகள் என்று யாருமில்லை.....
காயங்கள் கண்டதும் துடித்திடவும்
நிலவினை காட்டி உணவளித்திடவும்
அவன் மொழியினை கேட்டு ரசித்திடவும்
தாயனவள் அவன் அருகிலில்லை.....
வழி தெரியா பாதையிலே
வலிகளை மனதில் சுமந்து கொண்டு
தனிமையில் தினம் தினம் கரைந்துகொண்டு
தனை நேசித்திடும் உள்ளங்களை
அவனும் தேடுகிறான் அநாதையாக.............!!