நாமுத்துக் குமார் சுவாசம் இன்னும் ஓயவில்லை ---முஹம்மத் ஸர்பான்

கண்களால் உலகை அளந்தவன்
கண்ணீரால் பூக்களில் சிரிக்கிறான்
மண்ணின் மடியில் தவழ்ந்தவன்
மண்ணுக்குள் தூக்கம் கொள்கிறான்

வானத்தின் நிலவை பார்த்தவன்
வானத்தின் பருக்களை எண்ணினான்
கானத்தின் மெட்டை கேட்டவன்
கானகத்தின் சோகத்தை எழுதினான்

கருப்பை முட்டைக்குள் நீந்தியவன்
கருவறை தமிழனென நினைத்தான்
இருளின் மின்மினிகளை பிடித்தவன்
இருளின் மண்புழுவோடு பேசுகிறான்

நதியில் விழுகின்ற மேகத் துளிகள்
நதி வெள்ளம் பாட உனை அழைத்தது
சதியை எழுதுகின்ற இறைவனவன்
மதி மேடையில் மரணம் வைத்தான்

மானை கொன்ற குகைகள் கண்டேன்
பேனை கொண்ட தாகத்தை சொன்னேன்
சாலை எங்கும் குருவிகள் கண்டேன்
கலைக்கு நேர்ந்த அவலம் சொன்னேன்

கவிஞன் என்றாலும் மரணம் உண்டு
காவியம் என்றும் நீரில் கரைவதில்லை
படிக்கும் பக்கங்கள் நெஞ்சின் சுவாசம்
இடியும் மின்னலும் கவிஞன் வாசல்



பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக் குமார் அவர்கள்
தவணை முடிவில் இன்று மண்ணில் மூர்ச்சையாகினார்
ஆத்மாவின் சாந்திக்காகவும் அமைதிக்காகவும் பிராத்திக்கிறேன்.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (14-Aug-16, 1:33 pm)
பார்வை : 1273

மேலே