ஆசைகள்

அன்பே...
நான் பூவாய் இருந்தால்
உன் கூந்தலில் சூடுவாயா...?
சுமையாக இருக்க அல்ல
வாசமாய் இருப்பதற்கு!

அன்பே...
நான் பொட்டாய் இருந்தால்
உன் நெற்றியில் வைப்பாயா...?
நெற்றியை புண்ணாக்க அல்ல
அழகாய் இருப்பதற்கு!

அன்பே...
நான் வளையலாய் இருந்தால்
உன் கையில் போடுவாயா...?
கையை பிடிக்க அல்ல
கைதியாய் இருப்பதற்கு!

அன்பே...
நான் கொலுசாக இருந்தால்
உன் காலில் மாட்டுவாயா...?
காலை முத்தமிட அல்ல
இசையாய் இருப்பதற்கு!

எழுதியவர் : இதயவன் (15-Jul-10, 11:33 am)
சேர்த்தது : இதயவன்
Tanglish : aasaikal
பார்வை : 499

மேலே