சுதந்திர நாள்

அடிமையென அல்லல்பட்ட எம் பாரதம் , அகிம்சை அறவழியும்,
சீறும் சினவழியும் கொண்டு, தியாகச் சரித்திரங்கள் பலத் தந்து, வலிமையும், வீரமும் குங்குமப்பூ நிறத்தில் விதைத்து,
தூய்மையும், மெய்மையும் வெண்மையில் உணர்த்தி, பசுமையும், உழவின் பெருமையும் பச்சை நிறத்தில் படர்த்தி, அமைதியான மாற்றம் ஏற்கும் சக்கரத்தை நீலத்தால் நிறைத்து, சுதந்திரம் எனும் சுவாசக் காற்றில், நிமிர்ந்து நின்றிடு என உரைத்து, உயர்ந்துப் பறக்கிறது தன் 70 வது வயதினிலும்...
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்...!

எழுதியவர் : பாலகுமார் (15-Aug-16, 12:31 am)
சேர்த்தது : பாலகுமார்
பார்வை : 310

மேலே