மரணமும் ஒரு கவிதை

எமனே உனக்கு காதல் வந்ததா ...?
கவிதை வேண்டுமா...?.
கவிதை பக்கங்களை திருடு
கவிதை புத்தகத்தை திருடு
எதற்காக கவிஞனை திருடுகிறாய் ..?
நீ காலம் கடந்து பயணித்து விட்டாய்
நீ இப்பொழுது செய்தது கொலை
பூவை பறிக்காமல் மொட்டை பறித்து விட்டாய்
ஆயிரக்கணக்கான கவிதை அணுக்களை
செயலிழக்க வைத்தாய்
எங்கள் பாரதி உன்னோடு
கண்ணதாசன் உன்னோடு
வாலி உன்னோடு
காதலை பாட இவர்கள் போதாதா..?
இல்லை உனக்கு வாலிப கவிஞன் தேவை படுகிறதா ...?
பூமியில் கோடிக்கணக்கான காதல் இதயங்களின்
மெட்டுக்களுக்கு பாடல் கொடுத்தவர்
வற்றிய தேன் அடையும் தேன் சொட்டும் இவன் பாட்டுக்கு
ந. முத்துக்குமார் என எழுத
நா. முத்துக்குமார் என எழுதி விட்டாயோ
கற்பனைக்கு எட்டாத கவிதை ஒன்று இருக்கும் எனில்
அது இது தான் ..
ஏதேனும் இசை அமைத்து இருக்கிறாயா
பாடல் எழுத பிரம்மனை அழைத்து இருக்கலாம்
கவிதை வெளியிட்டு விழா வா
கணேசனை அழைத்து இருக்கலாம்
இதில் இருந்தே தெரிகிறது
எங்கள் தமிழ் கவிஞனை விட
இந்த பூமியில் யாரும் இல்லை

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (15-Aug-16, 7:24 pm)
பார்வை : 223

மேலே