தீர்க்கதருசி

அடர் வனத்தில் மேக மூட்டம்... தனியே தான் .... அப்பொழுது தூரத்தில் ஒரு சிறுமி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். .
வரும்பொழுது என்னை பார்த்து சிரித்துக்கொண்டே வந்தாள் ..
யார் இந்த சிறுமி?? .இந்த அடர்வனத்தில் எப்படி ?? என்று யோசனையில் இருக்கையில் அருகில் வந்து நின்று ...நீங்க யார் என்றாள் ??

நான் இந்த காட்டை ரசிக்க வந்த வேற்று ஊர்க்காரன் என்றேன்
அப்படியா சரி எப்போ நீங்க கெளம்புவீங்க ??என்றாள் ..
இன்னும் கொஞ்ச நேரம் தான் .. ஏன் ?? சரி நீ யார் ??
எங்கு இருந்து வர என்றேன் ...

அதோஅங்க ஒரு மலை தெரியுது பாருங்க அந்த மலைக்கு கீழ தான் நான் இருக்கேன்
சரி போகும் போது ஜாக்கிரதையா போங்க உங்களுக்கு ஒரு ஆபத்து இருக்கு என்றாள்
என்ன ஆபத்து??!! என்றேன்
என்ன ஆபத்து என்று சரியாக எனக்கு சொல்ல தெரியாது ,,ஆனா .இயற்கைக்கு மாறாக எது செய்தாலும் ஆபத்து என்று சொல்லிவிட்டு ஓடி அருகில் இருந்த காட்டுக்குள் மறைந்துவிட்டாள்..


யார் இவள் என்ற சிந்தனையில் பெட்டியில் மீதம் இருந்த கடைசி சிகரெட் துண்டை எடுத்து மீண்டும் பற்ற வைத்து பெட்டியை தூக்கி எறிந்தேன்...
பெட்டியின் மேல் உள்ள வாசகம் என்னை நோக்கி " புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாகும்" என்றிருந்தது

எழுதியவர் : அருண்வாலி (17-Aug-16, 7:01 pm)
பார்வை : 292

மேலே