என் தேவதை

காந்தக் கண்ணாலே
இழுத்துப் புட்டாளே
குழந்தைப் பேச்சிலே
குழைந்துப் போனேனே
அடிக்கும் மழையும்
உன் பார்வை பட்ட உடன்
அனலாய் உணர்ந்தேனே
ஒரு பார்வை ஒன்று விரித்து
என்னைப் பத்து நாள்
போர்வையில் சாய்த்தாலே
வெட்கத்தை விதையாய் போட்டு
என் காதல் கதையைத் தொடங்கி வைத்தாலே
என் காதல் வேரிலே
துளிர்விட போகும்
காதல் மரமடி நீ
இனி மீதி வாழ்வில்
என் ஆக்சிஜன் நீயடி
உன் காதல் பேச்சினால்
என் வாழ்க்கையை
ஆட்சி செய்திட வா
என் அன்புக் காதலியே .

எழுதியவர் : கௌசல்யா.ஞா (21-Aug-16, 10:15 pm)
Tanglish : en thevathai
பார்வை : 870

மேலே