இசை வண்ணம்

இசை வண்ணம்!
கண்களும் காதுகளும் கொளரவம் பெறும்
பறப்பதால் இது பறவை..
இசைப்பதால் மனதில் கொணரும் இசைவை.
பறவையோலி கேட்காத காலை
மலர்கள் இல்லாத தோட்டம் !
பூமி ஒன்றெனும் தத்துவத்தை சொல்லும்
வலசை போகும் பறவைக் கூட்டம்.
ஒவியமும் இசையும் கலந்த இந்தக் கலவை
ஆகாயத்தை எட்டிப் பிடித்து விட்ட இனிமை.

எழுதியவர் : பரதகவி (24-Aug-16, 1:52 pm)
Tanglish : isai vannam
பார்வை : 107

மேலே