கண்ணன் பிறந்தான்
பூமியில்
ஒரு நிலாக்காலம்
விழாக்கோலம் பூண்டது...
முழு பிரபஞ்சமும்
சின்னக் குழந்தையாய்
சிறையில் பிறந்தது...
பிருந்தாவனமாய் பூமி சிலிர்த்தது...
இலைகளின்
பனித்துளி தேனானது...
கரைபுரண்டு பாலோட
யமுனையின் நிறம் வெண்மையானது...
ஆயிரம் மயில்கள் அழகாய்
தோகை விரித்தது
மாயக் கண்ணனுக்கு
மயில்பீளை தந்திட...
சுண்டு விரலில்
சுகமாய் சுமைபட
மலைகள் இளைத்தது...
முதல்வனின் முத்தம்
தேடி மூங்கில்கள்
பூங்குழலாய்
பூத்தது...
கொஞ்சி மகிழ்ந்திட...
கோடி யுகங்கள்
கூடிச்சுருங்கி
கோகுல நாட்களானது...
"பெற்றவனுக்கே"
பிள்ளைகள்
பெயரிட்டனர்...
காற்று இசையானது...
கண்ணணை வாழ்த்திப் பாடியது...
பிரபஞ்ச பேரழகனின்
பிறந்த நாள் இன்று...