தாலாட்டு

தாயக நான் மாற
தரித்தாயோ -கண்ணுறங்கு ,

என் தவத்தால் எனக்கு
கிடைத்தாயோ -கண்ணுறங்கு ,

இரண்டாம் மாதம்
இலையுதிர் காலமாய்
இளைத்தேனே- கண்ணுறங்கு,

முன்றாம் மாதத்தில்
முழுநிலவாய் என் முகம்
முத்தே நீ சிரித்தாயோ -கண்ணுறங்கு ,

நான்காம் மாதம்
நகர்ந்தாயோ நந்தவனமே -கண்ணுறங்கு ,

ஐந்தாம் மாதம்
ஆராரோ நான் பாட
நீ கேட்டாயோ -கண்ணுறங்கு ,

ஆறாம் மாதம்
அரும்பே நீ குறும்பு
செய்தாயோ -கண்ணுறங்கு ,

ஏழாம் மாதம்
எண்ணில் பெரிய
மாற்றம் கண்டேன் -கண்ணுறங்கு ,

எட்டாம் மாதம்
அடி வைக்கையில்
சுகமான சுமை ஒன்று தோன்றியதே- கண்ணுறங்கு ,

ஒன்பதாம் மாதம்
ஒரு அடி கூட வைக்க முடியவில்லையடா- கண்ணுறங்கு ,

பிரசவத்தில் வலி கூட
உன் பூ முகம் பார்த்து மறந்தேனடா -கண்ணுறங்கு ,

தாயக என்னை மாற்றிய
தவமே நீ- கண்ணுறங்கு ,

அன்னை முகம்
காணாத எனக்கு -என்
அன்னை பாடிய கடைசி தாலாட்டு,

கண் மூடி கண்ணுறங்குகிறேன் ,
என் மன கண்களை திறந்து -அதில்

"என் தாய் முகம் தேடுகிறேன் "..

எழுதியவர் : மாலதி (26-Aug-16, 8:17 pm)
Tanglish : thaalaattu
பார்வை : 323

மேலே