காதலின் ஏக்கம் கவிதையின் தாக்கம்

இன்னும்
எதிர்ப்படாத
ஒரு காதலுக்கு
ஏங்கிக்கொண்டிருக்கிறேன்!
அந்த ஏக்கத்தில் தூக்கமில்லை..!

இன்னும்
எழுதப்படாத
ஒரு கவிதையை
வாசித்துக் கொண்டிருக்கிறேன்!
அந்த அறிவில் தெளிவில்லை...!

இன்னும்
ஏற்றுக்கொள்ளாத
ஒரு வலை வீசி
மீனுக்காக காத்திருக்கிறேன்!
அந்த விரதத்தில் பசியில்லை......!

எழுதியவர் : செல்வமணி (27-Aug-16, 8:59 pm)
பார்வை : 121

மேலே