காதலிக்கிறேன் என சொன்னவுடன்

யாராவது
உங்களைக்காதலிக்கிறேன்
எனச்சொன்னால்
நம்பி விடாதீர்கள்.!

உங்களுக்குள்
கேட்டுக்கொள்ள வேண்டியது,
'இந்தக்காதல் எதனால்,
எது வரை?" என்பதே!

ஏனெனில்
எல்லாமே மாறக்கூடியவை,
காலம், மனிதன், உணர்வு.

ஏன் இன்னும் கூட
எத்தனையோ விஷயங்கள்
கடைசி நேர
மாறுதலுக்குட்பட்டவை.

எழுதியவர் : செல்வமணி (28-Aug-16, 9:17 am)
பார்வை : 338

மேலே