தனிமை

தெரிந்தே என்னை நான்
உன்னிடம் தொலைத்தேன்
பெண்ணே
உன் காதல் முகவரி
தேடி அலையும் எனக்கு
உன் காதலி இவள் என
முகவரி தருவாயா இல்லை
தனிமையில் என்னை
தவிக்க விடுவாயோ !

கனவிலும் கற்பனையிலும் உன்னை
காதல் செய்யும் என்
காலங்கள் என்று நீங்கிச்செல்லும்
எனை விட்டு
கனவை உடைத்து
கற்பனை முடித்து
உன் அன்பை பெற துடிக்கும்
என் தனிமனம்
இருமணமாய்
என்று அமைதி கொள்ளும் இன்பமாய் பெண்ணே !

என்னை பார்த்து திருப்பும்
உன் முகம் என்னை வெறுக்கின்றது
என்ற பொழுதும் அந்த
வெறுப்பை கண்டு உன் மீது மேலும்
காதல் கொள்ள துடிக்கிறதே
தவிர
உன்னை ஒரு பொழுதும்
என் மனம் வெறுக்க நினைத்ததில்லை பெண்ணே !

என்னை சுற்றி
சுற்றமும் நட்பும் நிலைத்தாலும்
நீயின்றி நகரும் என் நொடி பொழுதுகள்
அனைத்தும் தனிமையே உணர்த்துகிறது
பெண்ணே !

சுற்றி கூட்டங்கள் இருந்தாலும்
நீ ஓருத்தி என் அருகே இல்லா
நாட்கள் அனைத்தும் தனிமையே
எனக்கு !

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (29-Aug-16, 11:08 am)
Tanglish : thanimai
பார்வை : 2019

மேலே