வறுமை விலகாதோ
வசதியிலா வாழ்வெனில் வந்திடும் வறுமை
வரம்பறியா வாழ்வின் வறட்சிநிலை வறுமை
வகையின்றி வாழ்ந்திட்டால் வாட்டிடும் வறுமை
வம்சங்கள் வளர்ந்தாலும் வஞ்சிக்கும் வறுமை!
வகுத்தறியா வாழ்வில் வளமும் வாராது
வழியிலா வாழ்வில் வறுமையும் விலகாது
வரவுள்ள வாழ்வே வறுமைக்கு வடிகால்
வட்டாணி வசமானால் வறுமையே வாராது!
வசியத்தால் வசமாகாது வழியும் வந்திடாது
வகுப்பு வாதங்கள் வகுமைக்கு வழியாகாது !
வழிமாறி வாழ்ந்தால் வறுமைக்கு வழியாகும்
வசந்தமும் வாராது வறுமையே வாழ்வாகும் !
வறியனின் வாட்டமே வறுமைக்கு வண்சிறை
வறுமையின் வடிம்பே வதங்கிய வதனம் !
வருக்குக்கே வழியிலா வறியோர் வாழ்வும்
வளைவுள்ள வறியோரே வறுமையின் வரைப்படம் !
வருத்துது வாட்டுது வறுமையின் வடிவங்களும்
வருவாய்க்கு வழியின்றி வாடும் வறியவர்களும்
வறுமையும் விலகாதோ வழியொன்றும் வாராதோ
வருந்தி வாடுகின்றேன் வருங்காலம் வளம்பெறவே !
(வட்டாணி=திறமை )
(வகுமை=மகிழ்ச்சி)
( வண்சிறை = மதில் )
( வடிம்பு = விளிம்பு, வதனம் = முகம் )
( வருக்கு = கஞ்சி )
பழனி குமார்