முதல் சந்திப்பு
இவள் போல் என்றெண்ணி மறந்த கன்னிகை,
கோவில் சாட்சியாய் எனை பார்த்து புரியும் பெண் நகை,
முதல் பார்வையில் மழையால் இணைந்தோம்,
நீர்வரும்முன் சிலையழகில் கல்லானேன்,
கண் பார்வையில் இதய துடிப்பை உணரச்செய்தாய்,
இமை மூடி திறந்து எங்கோ பார்த்தாய் - நான் பார்க்க
மற்றவர்கள் பேச்சில் கவனம் செலுத்தினேன்- நீ எனை பார்க்க
இந்த புரிதலின் பெயர் என்ன?
மறந்துபோன கேள்விகள் கூடுதல் பாரம் ஆக!.
விடைதெரிந்தும் மௌனமாக விலகினாள்- அரிவை