வெளி நாட்டு மோகம்

பெண்கள் வெளிநாட்டு
மாப்பிள்ளை தேடிடும்
மோகம் வந்தது ஏனோ?
திரையில் மோகன் படம்
பார்ப்பதை போல் மோகம்
கொண்டனரே வெளிநாட்டு
மாப்பிள்ளை மீது...

அக்கரை மாட்டுக்கு
இக்கரை பச்சை
என்பதனை மறந்தனரே...

உள்நாட்டு ஆண்மகன்
பொருளாதாரம் பலம் இல்லா
சோம்பி என எண்ணி...

வெளிநாட்டு சூர புலிகளோ
அதை விட கல் நெஞ்சம்
படைத்த பாசம் இல்லா
படைப்பு என சிந்திக்க
மறந்தனரே...

வாழ்வோ சாவோ எல்லாம்
சொந்த மண்ணில் நிகழ்ந்தால்
ஆறுதல் தானே...

தாய் மட்டும் அல்ல
தாய் மண் கூட நீ
பாதுகாப்பாய் வாழ
வழி வகுக்குமே...
இதை ஏன் மறந்தனரே...

தன் தலையில் தானே
மண் வாரி போட்டு
கொள்ளும் சூழ்நிலை
நேர்ந்திடுமே வெளிநாட்டு
மோகம்...

எழுதியவர் : பவநி (2-Sep-16, 6:25 pm)
Tanglish : veLi naattu mogam
பார்வை : 271

மேலே