ஆசிரியர் தின வாழ்த்துக்கவி

ஆசிரியர்கள்
முற்றுப்புள்ளியில்லா
ஆச்சர்யங்கள்
கோடுகளுக்குத்தானே முற்றுப்புள்ளி
அறிவின்
ஏடுகளுக்கு ஏது?

நைட்டிங்கேல்தான் அவர்கள்
கைவிளக்காய் கையில்
கல்விவிளக்கு ஏந்தியவர்கள்

வெரும்பலகை மழலையை
கரும்பலகை காட்டியே
பெரும்பலகை செய்தவர்கள்

புத்தகத்து நீர் எடுத்து
புத்தியதன் வேர் கொடுத்தீர்

வெற்றுப்பாறை தன்னில்
சிற்பம் செய்தீர் பாகுபலியாய்
உளி கொண்டல்ல
உங்கள் வலி கொண்டு

களிமண்களை
கனிமங்கள் ஆக்கினீர்
படிமங்களை
படிப்பாளிகள் ஆக்கினீர்
படிப்பாளிகளை
படைப்பாளிகள் ஆக்கினீர்

ஆணின் வெற்றிக்குப்பினால்
பெண்கள்
அனைவரின் வெற்றிக்கும் நீங்களே
தூண்கள்

மாதா பிதா குரு தெய்வம்
நீ அனைத்து கற்களின் ஒரு
உரு தெய்வம் கற்பிப்பதால்

தேய்பிறை வாழ்வை
வளர்பிறையாக்கி
வளமாக்கிய வழிகாட்டிகளின்
பாதங்களை தொட்டு
வணங்கி மகிழ்கிறேன்

எழுதியவர் : குமார் (5-Sep-16, 3:02 pm)
பார்வை : 236

மேலே