எச்சில் முத்தம்

எனக்குள்ளும் கவிதை உணர்வும் ,
ரசனை உணர்வும் உள்ளதென்பதை!!
கொண்டு வந்த பங்கில் என்னவன்
முண்டாசு கவிஞனுக்கு தான் எத்தனை
பங்குண்டு...!!!
முறுக்கு மீசைக்காரன் செல்லம்மாவின் காதலன்...
எனக்கும் காதலன் ,,,
வார்த்தைகளை சேர்த்து விட்டேன்
வானவில்லாக வானெங்கும்
பரவி கிடக்கின்றனவே!!!
எச்சில் முத்தமாகவே இருக்கின்றன என்னை வாழ்த்தும் ஒவ்வொருவரின்
குட்டி புன்னகையும் ....
ஆசிர்வதிக்கப்பட்டுவிட்டேன் அனைவரின் பாராட்டும் கிடைத்ததால்
அச்சம் என்பது இனி இல்லை அடுத்த தலைமுறையும் என் வார்த்தைகளை படிக்குமென்பதால் .....

எழுதியவர் : கா. நாகராணிMBA (5-Sep-16, 10:44 pm)
Tanglish : echchil mutham
பார்வை : 1799

மேலே