என்னதான் செய்வாள் இவள் - நேரிசை வெண்பாக்கள்
இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்
தலைநிறைய மல்லிகைப் பூவைத்த மங்கை
நிலைகுலைந் தாள்கண வன்தற் – கொலையாலே;
சின்னவீடாய் வைத்திட செல்வந்தர் கூப்பிட்டால்
என்னதான் செய்வாள் இவள்? 1
மதிப்பெண் பெரும்பான்மை மாலாபெற் றாலும்
விதிதானோ ஏழ்மையில் வாழ்தல் – கதியதுவோ?
என்றும் ’நமதம்மா’ நற்றுணை யல்லாலோ
என்னதான் செய்வாள் இவள்? 2
மதிப்பெண் பெரும்பான்மை மாலாபெற் றாலும்
விதிதானோ ஏழ்மையில் வாழ்தல் – கதியதுவோ?
என்றும் ’நமதம்மா’ நற்றுணை யல்லால்வே(று)
என்னதான் செய்வாள் இவள்? 3
மதிப்பெண் பெரும்பான்மை மாலாபெற் றாலும்
விதிதானோ ஏழ்மையில் வாழ்தல் – கதிதானோ;
என்றும் ’நமதம்மா’ இன்துணை ஈண்டின்றி
என்னதான் செய்வாள் இவள்? 4
மாண்புமிகு நம்முதல மைச்சர்தான் கைதூக்கி
ஈண்டிங்கே மாலா வினுக்குதவி - பூண்டதனால்
என்றும் ’நமதம்மா’ நற்றுணை யல்லால்வே(று)
என்னதான் செய்வாள் இவள்? 5
கணவனோ நாளெல்லாம் ’டாஸ்மாக்’ குடியன்;
குணவதியோ நல்லில்லாள்; உண்ண - உணவின்றி
இன்னும் குழந்தையுடன் பட்டினியால் வாழவே
என்னதான் செய்வாள் இவள்? 6
இவற்றில் மூன்று பாடல்களை தனித்தனி அஞ்சலட்டையில் அனுப்பினேன். ஆறாவதாக உள்ள பாடல் செப்டம்பர் இதழில் வெளியாகியுள்ளது.
அமுதசுரபி அக்டோபர் மாத வெண்பாப் போட்டிக்கான ஈற்றடி:
'காந்தியே நம்தலைவர் காண்'.
செப்டம்பர் 15 தேதிக்குள் சேரவேண்டும்.