வாழ்க்கை

கடந்து வந்தேன் கடந்து வந்தேன் என்று கால் புதைய புதைந்து கொண்டே இருக்கிறாய்
சிறகுகள் இருப்பதாய் சிந்தனைகளோடு மோனையும் எதுகையும் கொண்டு படிமங்களை படிய விடுகிறாய்
உன் சிறகுகளோ உன்னிடத்தில் இல்லை
புலமை தேங்கிடாமல் அழிக்கும் வலிகளிலிருந்து வெளிப்பட்டு சராசரி பாதையையும் வாழ்ந்திடத் துடிக்கும் உன் மனம் கேள்
சிறகு பெறு சிந்தை மாற்று தேடிச்சென்று தெளிந்த முடிவெடு தொங்கிக் கொண்டும் ஏங்கிக் கொண்டும் இருப்பதல்ல வாழ்க்கை

எழுதியவர் : அகராதி (12-Sep-16, 5:44 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 113

மேலே