கவியோடு தினம்வாழுவேன்

இனிநாளும் புதிதாக இசைபாடும் குயிலாக
***இனியேனும் மனம்மாறுவேன் !
தனியாக இருந்தாலும் தடுமாறித் தவியாமல்
***தமிழ்ச்சோலை தனில்கூடுவேன் !
கனிவோடு புகழ்கூறி கணநாதன் அருள்நாடி
***கவியோடு தினம்வாழுவேன் !
நுனிநாவில் கலைவாணி நொடியேனும் நடமாட
***நுதிபாடி ஜதிகூறுவேன் !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Sep-16, 12:45 am)
பார்வை : 90

மேலே