​தாலாட்டும்​ ​​தமிழ்

அன்னைத் தமிழே தாலாட்டும்
--ஆயுள்வரை நம்மை சீராட்டும் !
இன்பத்தைத் தந்திடும் மொழியிது
--ஈடில்லா சுந்தர தேமதுரமது !
​எம்மதமும் சாராத பொதுமொழி
--ஏற்றிடுவார் எந்நாட்டு மக்களும் !

இலக்கியம் பறைசாற்றும் பண்பினை
--இதிகாசம் இயம்பிடும் இலக்கணத்தை !
கரும்பினிய மொழியால் இனித்திடும்
--இரும்பான இதயமும் இசைத்தமிழால் !
இதயங்களை இணைக்கும் இனியதமிழ்
--உள்ளத்திற்கு சுகம்தரும் தெள்ளுத்தமிழ் !

காப்பியங்கள் காவியங்கள் கனியமுது
--கலையும் கலாச்சாரமும் தேனமுது !
பாட்டிசைத்த புலவர்கள் பல்லாயிரம்
--பாக்களை படித்தவர்கள் பலகோடி !
நன்பாக்கள் வெளிக்கொணர்ந்த நற்றமிழ்
--வெண்பாக்கள் வெளிவந்த தூயதமிழ் !

இதயங்களை குளிரவைக்கும் இசைத்தமிழ்
--வாழ்வின் நெறிகளை வகுத்தத்தமிழ் !
புவியெங்கும் புகழுடன் வாழ்ந்திடும்
--கவிகளை உருவாக்கிய உற்றத்தமிழ் !
குறள்தந்த வள்ளுவனின் ஈரடிகளால்
--உலகத்தை ஈர்த்திட்ட உயர்தமிழ் !

தமிழன்னை மடிதனில் தலைசாய்த்து
தரணியில் வாழ்வதே பெருமையன்றோ !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (18-Sep-16, 9:00 am)
பார்வை : 679

மேலே