மவுனமாய் ஒரு வலி

போலியோ டிராப்ஸ்
கொடுத்து வளர்த்த குழந்தை
இன்று வளர்ந்து துடிக்கிறது
மன வலியில்...

காட்சிகளைக்காட்டிக்காட்டி
வளர்த்த குழந்தை,
கண்ணில் ஏதோ நோய் -
பருவக்கோளாறு என்று
டாக்டர் சொல்லத்தேவையில்லை.

காலங்காலமாய்
இந்த வலிகளுக்கு
தீர்வே இல்லை,
அன்பு பிரியம் பாசம் என்பதன்
இன்னொரு பரிமாணத்திற்கு
இது தானா பரிணாமம்!

ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து
அடுத்த கட்டத்திற்கு பயணித்த
மனிதனுக்கு
இனியும் ஒரு யுகமுண்டு,

அன்பின் துடிப்பில் பிறந்து அதே
அன்பின் இன்னுமொரு துடிப்பில்
மடிவதற்கா மானிடன் அவதரித்தான்,

வலிக்கு ஒரு வழியுண்டு,
விழிகளை மூடி அந்த
வழிகளை அடைத்து
மாற்று தேடும் மனிதா

மாற்றம் வேண்டும்,
கற்றுக்கொள், கற்றுக்கொடு,
அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ்!

எழுதியவர் : செல்வமணி (21-Sep-16, 9:50 pm)
பார்வை : 763

மேலே