என் கண்ணீரில் கரையும் இனிமையான காலங்கள்.....

நீ தொலைபேசியில் பேசும் போது
சின்னதாய் உன் குரலில்
மாற்றமென்றாலும்
நான் துடித்துப் போன காலங்கள்...

உன் முகம் காணாவிட்டாலும் கூட
உன் முகவாட்டம் அறிந்து
என்னாச்சு என்னாச்சு என்று
இடைவிடாது நலம் விசாரித்த காலங்கள்....

ஒரு நாளாவது உன் குறுந்தகவல்
வரவில்லையென்றால்
சின்னதாய் செல்லசெல்லமாய்
சண்டையிட்ட காலங்கள்......

பேருந்தில் செல்லும் வேளைகளில்
கண்ணாடிக்கு அருகில் அமர்ந்து
தரிப்பிடத்தில் நிற்கும் உன்னை கடைக்கண்ணால் பார்த்து தலையசைத்துச் சென்ற காலங்கள்.....

இப்படி இன்னும் சொல்லாமல்
மனதோடுமட்டும் பூட்டி வைத்து
அழகு பார்க்கும் சம்பவங்கள்....

இவற்றையெல்லாம் தினம் தினம்
மனதுக்குள் மீட்டிப் பார்ப்பதில்
எட்டிப்பார்த்த கண்ணீர்துளிகளின் ஈரம்.....

என் விழிவழி வழிந்து
மார்பினூடாக சென்று
தலையணையை நனைத்து
தடாகமாகிப் போக
மிதந்து கொண்டிருக்கின்றேன்
தண்ணீரில் அல்ல
என் கண்ணீரில்.....!

எழுதியவர் : சி.பிருந்தா (23-Sep-16, 3:34 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 1104

மேலே