அழைப்பாயோ என் அன்பே

என் அலைபேசி தேவதையே!

அழகியே உன் முகம் காணவே அந்த
அலைபேசியும் தவிக்குதடி!
உன் விரல் நுனி படவே
தொடுதிரையும் தவமிருக்குதடி !
உன் குரல் கேட்கவே அந்த
ஒலி வாங்கியும்(mic) துடிக்குதடி!
உன் இதழ் பட்டு வரும் வார்த்தை கேட்கவே ஜீவனும் வாழுதடி!
பெண்ணே நீ விரைவாய் பேசிடு
என்உயிர்(மின்கலன்)பிரியும் முன்பே!

குமாகருவாடு

எழுதியவர் : குமா கருவாடு (24-Sep-16, 11:52 pm)
சேர்த்தது : கருவாடு
பார்வை : 97

மேலே