மனசு பேசுகிறது மனிதனாய் இரு சகோதரனே

கர்நாடகச் சகோதரனே....

காவிரி...

கொளுந்து விட்டு எரிகிறது தண்ணீர் கிளப்பிய தீ....

எங்களுக்கு உரிமையான தண்ணீரைத்தானே கேட்டோம்... நெருப்பையும் அல்லவா சேர்த்துக் கொடுக்கிறாய் நீ... உன்னை உறவென்று நினைத்தோம்... நீயோ வெறி கொண்டு அலைகிறாயே... உன்னை வெறியன் என்பதில் தவறில்லைதானே.... மன்னிக்கவும் நேற்று வரை... ஏன் இன்று கூட உன்னை... கன்னட உறவு என்றுதான் நினைத்திருந்தேன்.... எழுதி வந்தேன்... ஒரு பெரியவரை அடிக்கிறாயே... பின்னே உன்னை உறவென்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது.... நாங்கள் வயதுக்கு மட்டுமல்ல அன்புக்கும் மதிப்புக் கொடுப்பவர்கள்... ஆமாம் அவர் அப்படி என்ன செய்து விட்டார்...? சீத்தாராமையாவைக் கூப்பிட்டு தண்ணீர் திறந்து விடச் சொன்னாரா..? உச்சநீதி மன்றத்தில் தண்ணீர் கேட்டு வழக்குத் தொடர்ந்தாரா..? அதுவும் இல்லாது இங்கிருக்கும் கன்னட சகோதர சகோதரிகளை அடித்து உதைத்தாரா...? எதற்காக அடிக்கிறாய்..? கன்னடம் பேசச் சொல்லி அடிக்கிறாயே நாயே... நாங்கள் தமிழ் பேசச் சொல்லி எங்கள் குழந்தைகளைக்கூட அடிப்பதில்லையடா பரதேசி... கேபிஎன் பேருந்து தமிழனுக்கு மட்டும் ஓடவில்லை... உனக்காகவும்தான் ஓடியது என்பதைக் கூட உணர முடியாதவனா நீ... அதன் உரிமையாளர் கஷ்டப்பட்டு இந்த உயரத்தை அடைந்தார் என்பதைக் கூட அறியாதா ஜென்மமாடா நீ... மல்லையாக்களை வளர்த்தவன்தானே நீ... கஷ்டப்படுபவனை உனக்கெப்படித் தெரியும்... நீயெல்லாம் என்ன பிறவி... உனக்கு எரியும் பேருந்து முன் செல்பி தேவைப்படுகிறது... மூளை என்னும் செல் இல்லாத உனக்கு செல்பி ஒரு கேடா...? முகநூலில் உடனுக்குடன் வீடியோ பகிர்வது எதற்காக...? வீரன் என்று காட்டவா...? அப்பாவியிடம் வீரம் காட்டுவதில் அப்படி என்னடா சந்தோஷம் இருக்கிறது வெட்கங்கெட்டவனே... தண்ணீர் திறக்கச் சொன்னது உச்சநீதிமன்றம்... திறந்து விட்டது உங்கள் மாநில அரசாங்கம்... இதில் எந்த மயிருக்குடா தமிழனை அடிக்கிறாய்..? ஆத்தா, அப்பன், அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என உனக்கு சொந்தமெல்லாம் இல்லையா...? மிருகம் அல்ல நீ... மனிதன் என்பதை உணர். மிருகங்கள் கூட இனத்துக்குள் அடித்துக் கொள்வதில்லை...

காவிரி... பிறப்பது கர்நாடகம் என்றாலும் புகுந்த வீடான எங்கள் தமிழகத்தில்தான் நீண்ட தூரம் பயணிக்கிறாள்... பசுமையை தன் கரைகளில் பார்த்துப் பயணித்தவளின் உடம்பில் ரத்தத்தைப் பாய்ச்சும் செயல் என்னடா செயல்... தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்றும் தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுக்கணும் என்றும் வீட்டுக்கு வந்தவங்களுக்கு முதல்ல தண்ணி கொடுக்கப் பழகிக்க என்றும் சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்... வளர்ந்தவர்கள் நாங்கள்... ஆனால் நீயோ...? வன்மம் கொள்... வக்கிரத்துடன் திரி என்று வளக்கப்பட்டாயோ... அப்பாவிகளை அடித்து உன் வீரத்தைக் காட்டுகிறாயே... மூத்திரத்தைக் குடிக்கச் சொல்கிறாயே... நீ அதைக் குடித்துத்தான் வளர்ந்தாயோ... அதான் இவ்வளவு மூர்க்கமாய் இருக்கிறாய் போலும்... எங்கள் பதிலடி உனக்கு திருப்பிக் கிடைத்தால் நீ தாங்கமாட்டாய் என்பதை உணர்ந்து கொள்... எங்கள் மாநிலத்தில் இருந்து உனக்கு வரும் மின்சாரத்தை நிறுத்தினால் நீ இருட்டுக்குள்... உனக்கு விடிவேது...? யோசித்தாயா...? கேட்டால் நெய்வேலியும் கூடங்குளமும் இந்தியனின் சொத்து என்பாய்... காவிரி கன்னடனுக்கு சொந்தம் என்பாய்... காரணம் எங்களை ஆளும்... ஆண்ட மூதேவிகளின் முட்டாள்தனம்தான் என்பதை நாங்களும் அறிவோம்.

காவிரி... விவசாயத்திற்காக தண்ணீர் கேட்டால் வன்முறை விதைத்து ரத்தம் வார்க்கிறாய்... காவிரியின் இரு கரைகளையும் தொட்டுத் தழுவி தண்ணீர் மகிழ்வாய் ஒடி வந்து பார்த்தவர்கள் நாங்கள்... இன்றோ நீ தண்ணீருக்குப் பதில் அதன் இரு கரைகளிலும் நெருப்பு வைத்துச் சந்தோஷம் கொள்கிறாய். நைல் நதியை மூன்று நாடுகள் பகிர்ந்து கொள்வதை அறிவாயா...? எல்லைப் பிரச்சினையில் என்றும் முட்டிக் கொள்ளும் பாகிஸ்தானும் நாமும் சிந்து நதியைப் பிரித்துக் கொள்வதில் என்றுமே முட்டிக் கொண்டதில்லை என்பதை நீ அறிவாயா...? கிறுக்குத்தனமாக கிரிக்கெட்டுக்கு அடித்துக் கொண்டாலும் நமக்கும் பங்களாதேஷ்க்கும் கங்கையை பகிர்ந்து கொள்வதில் எந்த இடர்பாடும் இல்லை என்பதை நீ அறிவாயா..? எந்த ஒரு நாட்டிலும் நதிகளுக்கான பிரச்சினைகள் இருப்பதில்லை... எங்களுக்கு மட்டுமே நதிகளே பிரச்சினையாய்...

காவிரி... நீ அவள் பெயரை வைத்து அரசியல் பண்ணுகிறாய்.... வாய்க்கு அரிசி கிடைக்காதே என்று தவிக்கும் விவசாயிக்கு தண்ணீர் கொடுக்காமல் வாக்கரிசி போட நினைத்து உனக்கு நீயே ஏன் குழி வெட்டிக் கொள்கிறாய்... ஐடி கம்பெனிகள் யோசிக்கிறதாம்... வருமான இழப்பாம்... பத்திரிக்கைகள் கூவுகின்றன... உன் இழப்பு இருக்கட்டும்... அது நீயே வைத்துக் கொண்ட வினை... எம் மானத்தை இழந்து நிற்கிறோமே... எல்லாத்துக்கும் பொறுமை... பொறுமை... என்பது எங்கள் குணம்தான்... இல்லை என்று சொல்லவில்லை.... அதனால்தான் ஒன்றிரண்டு வன்முறைகள் நிகழ்ந்த போதும் எதிர்பாராத விபத்தில் சிக்கி, எங்கே இவர்கள் நம்மை அடிப்பார்களோ என்று பயந்து நின்ற உன் மாநிலத்தவரை மிகுந்த அன்போடு விபத்தில் இருந்து மீட்டு... அவர்களை பாதுகாப்பாய் அனுப்பி வைத்துவிட்டிருக்கிறான் தமிழன் என்பதை அறிந்தாயா இல்லையா...? நீ எப்படி அறிவாய்... உனக்கு அறிவிருந்தால்தானே அறிவாய்... உன் அப்பன் வயதுக்காரன்.... கிழவன்... சிரித்தபடி பதில் சொல்லும் அவரை எப்படியடா அடிக்க மனம் வந்தது...? உன மாநிலத்தவனுக்கு சின்ன பிரச்சினை என்றதும் சீத்தாராமைய்யா பதட்டப்படுகிறார்... உடனே கடிதம் எழுதுகிறார்... எங்களைப் பார்.... எம் இனம் கன்னடன் என்னும் வெறியர்களால் அடிபட்டுச் சாகும் போது பூக்களால் அலங்கரித்து புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறார் எங்கள் முதல்வர்... இதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்... எங்கள் பொறுமையும் வெடிக்கும் நாள் அதிக தூரமில்லை... அப்படி வெடித்தால் என்னாகும் என்பதை யோசித்துப் பார்.

உனக்கொன்று தெரியுமா...? நாங்கள் இதுவரை பிரபுதேவாவை எங்கள் தமிழனாய்த்தான் நினைத்திருந்தோம்... நீ ஆரம்பித்த வன்முறையில்தான் தெரிகிறது அவர் மட்டுமல்ல இன்னும் சிலரும் கன்னடர் என்று... ஆனாலும் நாங்கள் அவர்களை தமிழராய்த்தான் பார்க்கிறோம்... எங்கள் நிலமைதான் உங்களை கொக்கரிக்க வைக்கிறது... எங்கள் விவசாயிகளின் வயிறு எரிவதை அடக்க நினைக்கிறாய் நீ... நாங்களோ உங்களால் நான் உங்களுக்காக நான் என்ற வசனத்தை நம்பி ஏமாந்ததால்தான் இன்று எங்கள் போராட்டத்தில் நடிகர்கள் வரவேண்டும் என்று வெறும் வயிற்றோடு காத்திருக்கிறோம்... எத்தனை கொடுமை இது...? எவ்வளவு வேதனையான விஷயம் இது.../ தேர்ந்தெடுத்த முதல்வர் தெருவில் அடிபடுபவனைப் பற்றி கவலை இல்லாமல் தேரில் பவனி வருகிறார்.... எங்கள் பிரதிநிதிகள் என்று நினைத்த எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் எங்கே என்றே தெரியவில்லை.... எதிர்க்கட்சித் தலைவருக்கு சேர நன்நாட்டிளம் பெண்களுக்கு ஒணம் வாழ்த்துச் சொல்லத் தெரிகிறது.... கர்நாடகாவில் அடிபடும் எம் இனத்தின் ஓலம் கேட்கவில்லை... இதெல்லாம் எங்களின் பொறுமையை புடம் போட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் வெடித்துக் கிளம்பினால் நீ வீழ்ந்து மடிவாய் என்பதை மறந்துவிடாதே....

நாம் இந்தியர்கள்... இந்தியர்கள் அனைவரும் சகோதர சகோதரிகள் என்று படித்ததெல்லாம் போயாச்சு... நாங்கள் தமிழர்கள்... எங்களின் வீரம் இன்று நேற்றுக் கதை அல்ல.... பண்டைய வரலாறுகளைப் பார்... எங்கள் வீரத்தை அறிவாய்.... எங்களுக்கு இனி சகோதர இந்தியா வேண்டாம்... சண்டையில்லாத தமிழகமும் தன் மானம் இழக்காத தமிழனும் போதும். எங்களின் காளைகளை நாங்கள் நேசித்தும் பூஜித்தும் வந்தாலும் அதை வதைக்கிறோம் என்று எத்தனை அமைப்புக்கள் எதிராகக் கிளம்பி எங்கள் வீரவிளையாட்டை அறுவடை செய்தார்கள் தெரியுமா...? இதோ எம் இனம் நெருப்பு வெறியனான உன்னிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது கேட்க ஒரு நாதியையும் காணோமோ.... நாதியத்தவன் தமிழன் என்பதை இலங்கையில் சொன்னான்... இன்று கன்னடனான நீயும் சொல்கிறாய்...

நாங்கள் மனிதர்களாக வாழ்ந்து பழகிவிட்டோம்... பக்கத்து மாநிலத்தில் அரக்கர்க்கள் இருப்பார்கள் என்று நினைக்கவில்லை... அன்பான மனிதர்கள்தான் இருப்பார்கள் என்றே நினைத்திருந்தோம். எத்தனை வன்மத்தை உன்னுள் புதைத்து வைத்திருந்திருக்கிறாய்.... மனித நேயமே இல்லாத அற்பனே... நாங்கள் எங்களின் வித்துக்களுக்கு அன்பையும் பொறுமையும் நேசத்தையும் சொல்லி வளர்க்கிறோம்... நீயோ வன்முறை எண்ணெய் ஊற்றி வளர்க்க ஆசைப்படுகிறாயே... எரியும் நெருப்பில் செல்பி எடுக்கிறாய்... எரியும் காரைப் பார்த்து சிரித்தபடி செல்லும் குமரிகளைக்கூட உன் மாநிலத்தில்தான் பார்க்க முடிகிறது... அப்பாவிகளைப் பிடித்து அடிப்பதை சிரித்து வேடிக்கை பார்க்கும் கழுகுக் கூட்டத்தையும் உன் மாநிலத்தில்தான் பார்க்க முடிகிறது... உனது வாரிசுகளுக்கு அன்பை சொல்லிக் கொடு... வன்முறைச் சொல்லிக் கொடுக்காதே... வளரும் தலைமுறையாவது வன்மம் அறியாது வளரட்டும்.

எங்களுக்கு தண்ணியே வேண்டாம் நீயே வைத்துக் கொள் அல்லது உன் இனத்தை அதனால் அழித்துக் கொல்... எங்களுக்கு காவிரி வேண்டாம்... இன்று தண்ணீர் தர மறுக்கும் நீ... மழை பெய்து உன் மாநிலத்தில் கரையோரக் கிராமங்கள் மூழ்கியதும் உபரி நீரை எங்கள் பக்கம் திறக்காதே... திறக்க நினைக்காதே... அதை உன் மக்களைக் குடிக்கச் சொல்... இல்லை அதில் அவர்களைக் குளிக்கச் சொல்... பெரிய அணை கட்டி உன் மாநிலத்துக்குள் திருப்பிக் கொள்... இப்போது நீ பொங்குகிறாய்... உபரித் தண்ணீர் வந்து நீ திறக்க நினைக்கும் போது நாங்கள் பொங்கினால் கர்நாடகம் காணாமல் போகும் என்பதை உணர்...

போதும் கன்னடச் சகோதரனே... நிறுத்திக்கொள்.... இல்லையேல் உபரித் தண்ணீர் உனக்கு எமனாகும்... உறவுகள் துறந்து நீ நிற்கும் நிலை வரும்... யோசித்துக் கொள்.

என்றும் உறவாய்...
மறத் தமிழன்... மானமுள்ள தமிழன்.

-'பரிவை' சே.குமார்

எழுதியவர் : சே.குமார் (27-Sep-16, 10:38 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 176

மேலே