என்னை கடந்து சென்ற அந்த நிமிடம் 555

என்னவளே...

என் நெஞ்சில் விழுந்த உன் நிழல்
இன்னும் மறையவில்லையடி...

என் இதயத்திற்குள்
ஏற்பட்ட காதல் அழுத்தம்...

என்னை மட்டும் அதிகம்
தாக்குதடி கண்ணே...

எனக்குள் ஏற்பட்ட காதல்
உனக்குள்ளும் உருவானதா...

உன்னிடம் கேட்காமலே நான்
என்னை தந்தேனடி...

நீ என்னை கடந்து
சென்ற அந்த நிமிடம்...

அந்த இரவு எனக்கு
பைத்தியக்கார இரவாகவே கழிந்ததடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Oct-16, 8:55 pm)
பார்வை : 485

மேலே