தலப்பா கட்டி விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

தலப்பாவைக் கட்டி தனியமர்ந்து, காணும்
உலகத்து மாந்தர்க்கே ஊக்கம் - பலகாலும்
தந்தவண்ணம் காக்கும் விநாயகனைக் கும்பிட
வந்திடாதெந் நாளும் துயர்! 1

கலைதோன்ற காட்சிதரும் நல்விநாய கன்நீ!
தலப்பாகை யோடு அமர்ந்தே - நலங்களை
நல்குகின்ற நானிலம் போற்றுகிற நல்லவனை
வல்லவனை என்றும் வணங்கு! 2

கலை - திறமை, சாமர்த்திம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Oct-16, 8:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

மேலே