நர்த்தன விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
இடதுபாதம் தூக்கியாடும் நர்த்தன நாதன்
உடன்வருவா னென்பரே ஊரார் - மடம்கொண்டே
எண்ணிய போதெல்லாம் எங்கள் குறைதீர்ப்பான்
திண்ணமிது என்பேனே நான்! 1
மடம்கொண்டு - அறியாமையால்
நர்த்தன நாயகனாம் நல்விநாய கன்தாளை
அர்ச்சனை செய்மலரால் ஐயனும் – தர்(இ)சனம்
நல்கிடுவான்; நாமவனைப் போற்றிப் பெறுவோமே
எல்லையில்லா இன்பம் இனிது! 2