பாட்னா விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
பாட்னா விநாயகனின் பார்வை ஒருதினுசு;
கேட்காம லேயறிவான் என்மனசு - போட்டு
குழம்பவே வேண்டாமே; கும்பிட்ட வர்க்கு
வழங்குவான் எந்நாளும் வாழ்வு! 1
பாட்னா விநாயகனின் பார்வைநம் மேலது
நோட்டமாகப் பட்டாலே போதுமையா - கேட்டதெலாம்
தான்தருவான் நல்லதையே தன்னெஞ்சில் எண்ணுவோர்க்கு;
நான்தாள் பணிவேன் மகிழ்ந்து!! 2