பாடும் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

பாடும் விநாயகனைப் பார்த்து வினைதீர்க்க
நாடும் அடியவர்க்கு நாள்தோறும் - பீடுடைய
நல்விநாய கன்நலமே நல்குவான்; காலமெலாம்
வல்விநாய கன்தாள் வணங்கு! 1 *

தம்புராவைக் கையிலே வைத்தபடி தான்பாடும்
நம்விநாய கன்புகழை நாம்பாட - நம்வினைகள்
தீர்ந்திடுமே; ஒவ்வொரு நாளும் தவறாமல்
ஓர்ந்தே அவன்புகழைப் பாடு! 2 *

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Oct-16, 3:28 pm)
பார்வை : 97

மேலே