பால விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

பால விநாயகனைப் பாடிப் பரவிடவே
காலமெலாம் நம்வினைகள் காற்றோடு - ஞாலத்தில்
சொல்லாமல் ஓடிவிடும் என்றேநான் சொல்லுவேன்;
எல்லோரும் பாலனையே பாடு! 1

பாடிப் பரவிடவே பால விநாயகன்
தேடியே வந்தருள் தந்திடுவான் - ஓடிடும்
துன்பம் தொலைதூரம்; தூய அவன்புகழை
என்றும் இயம்பு களித்து! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Oct-16, 8:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 149

மேலே