ஆறு முடிச்சில் ஓர் உயிர் ஊஞ்சல்
ஆறு முழக்கயிற்றில் உயிர் கொடியாய் ஏறி ,
மூச்சுக் கணங்கள் உதிர்த்து ,
காயப்பூக்களாய் பூத்து....... காகிதப்பூவாய் உதிர்வது ஏனோ !?!
இரவலாக வாங்கி வளர்த்த உயிரை,
பலிகொடுக்கும் உரிமை , யார் கொடுத்தது உனக்கு?
ஆடு,மாடு,கோழிகள் கூட தற்கொலை செய்வதில்லை...கசாப்புக்கடையின் கடைசிநிமிடம் வரையிலும் !
மனிதனே இது நியாயமா? எறும்புக்கும் கூட ஒரு வாழ்க்கை உண்டென்பதை அறியவில்லையா?