வாடிக்கிடக்கும் என் இதயம் உன்னால் 555
என்னுயிரே...
வண்டு வாழ்ந்துவிடும் துளிதேன்
இருக்கும் பூவிருந்தால்...
முத்துக்கு இருப்பிடம்
நீருக்குள் ஒரு சிப்பித்தான்...
நீ இருக்குமிடம் என் இதயம்தான்
நான் கேட்பதெல்லாம் உன்னிடம்தான்...
பட்டமரம் விழுந்துவிட்டால்
கவலையில்லை...
பாசம் வைத்த காதல் மனம்
விழுந்துவிடக்கூடாதடி...
உன்மீது ஆசைவைத்தேன்
உன் மேனி மீது அல்ல...
வாடி இருக்கும் செடிகளை போல வாடி
கிடக்குதடி என் இதயம்...
நீ நிமிடம்
இதழ்திறக்க மறுப்பதால்...
ஓடிக்கொண்டு இருக்கும் நீரை
அணைபோட்டு தடுப்பதுபோல...
ரத்த நாளங்களில் அங்கங்கே
உன் நினைவுகள் அணைபோடுதடி...
என் இதய துடிப்பு நிற்குமுன்னே
நீ இதயம் பரிமாறிக்கொள்ளடி...
காத்திருக்கிறேன் கண்ணுள்
உயிரை வைத்து நான்.....