தனிமையில் ஒரு பேதை
My Drawing .....My Words....
*************************************
காதல் புரிதலின் போது
விதைத்தாள்... கனவுகளை!.
காதல் பிரிதலின் போது
அறுவடை செய்தாள் .....கண்ணீரை!
உளவியலும் ,உயிரியலும்
நெஞ்சுக்குள் பிசைந்தெடுக்க,
உயிராய் உருகி ஊமையாகிப்
போகிறாள் .....விளக்கேற்றும் மாலை வேளையில்!!