காதல் வலி - 31

அவள்
உதட்டுச் சிவப்பைக்
கண்டிருந்தால்
இளங்கோ சிலப்பதிகாரம்
எழுதாமல் சிவப்பதிகாரம் எழுதியிருப்பார்

இவள் குரலை கேட்டிருந்தால்
வள்ளுவன் திருக்குறள்
எழுதாமல் இவள் குரலை எழுதியிருப்பார்

ஷாஜகான் இவளைப் பார்த்திருந்தால்
தாஜ்மஹாலைக் கட்டாது
இவளைக் கட்டியிருப்பான்

வீரப்பன் சந்தனமரத்தைக்
கடத்தாமல்
இந்த சந்தனத்தைக் கடத்தியிருப்பான்

குறுந்தொகை எழுதியவர்
கூந்தல் தொகை எழுதியிருப்பார்
இவள் கூந்தலைக் கண்டிருந்தால்

எனக்கு மட்டும்
நிலவிற்குப் போகும் ஆசை இல்லை
இவள் இருக்கையில்

என் வாழ்க்கையே இவளின்
இரு கையில் ...

எழுதியவர் : குமார் (19-Oct-16, 7:44 pm)
பார்வை : 1355

மேலே